திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா பேராலயத்தில் விமரிசையாக நடைபெற்ற தேர்பவனி - ஏராளமானோர் பங்கேற்பு
Jul 27 2015 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா பேராலயத்தில், ஆண்டுப் பெருவிழாவையொட்டி தேர்பவனி விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா திருத்தல பேராலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இப்பேராலயத்தின் 135-வது ஆண்டுப்பெருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி, நேற்றிரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், அர்ச்சிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், உலகமீட்பர் மற்றும் சம்மனசு சொரூபங்கள் வைக்கப்பட்டு, தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர், இறைவனைப் போற்றும் பாடல்களை பாடியபடி கலந்துகொண்டனர்.