திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில், ஆனிமாத வெள்ளிக் கிழமையையொட்டி அம்மனுக்கு செய்யப்பட்ட காய்-கனிகள் சிறப்பு அலங்காரம் : ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்
Jul 4 2015 7:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில், ஆனிமாத வெள்ளிக் கிழமையையொட்டி அம்மனுக்கு காய்-கனிகளைக் கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
உறையூரில் பிரசித்திப் பெற்ற வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாத 3-வது வெள்ளிக் கிழமையன்று, காய்-கனிகளின் விளைச்சல் அதிகரித்து மக்கள் வளமுடன் வாழ வேண்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு பக்தர்களிடமிருந்து பெறப்படும் காய்-கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, நேற்று வெக்காளியம்மன், காய்கனிகளால் ஆன சாகம்பரி அலங்காரத்தில் காட்சியளித்தாள். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சாற்றப்பட்ட காய்-கனிகள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே உள்ள மகிழி கிராமத்தில் பழைமை வாய்ந்த 32 அடி உயர வாள்முனீஸ்வரன் கோயிலில், ஆனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மித் திருவிழா நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முனீஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.