திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.10 கோடி : 2 கி. 800 கிராம் தங்கம், 25 கி. வெள்ளி கிடைக்க பெற்றதாக தகவல்
Jun 7 2023 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மே மாத உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 ரூபாயும், 2 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் 25 கிலோ வெள்ளியும், 292 வெளிநாட்டு பணமும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.