கோவை அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி : ஆரவாரத்துடன் கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள்
Jun 5 2023 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாக்கினாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி, பாரம்பரிய கிராமிய கலைகளான பவளக்கொடி வள்ளிகும்மியாட்டம், சலங்கையாட்டம், கம்பத்தாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மடத்துக்குளம் கலைக்குழுவினர் சார்பில் நடத்தப்பட்ட பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வாரத்துடன் கண்டு ரசித்தனர்.