தெலங்கானாவில் 3டி தொழில்நுட்ப பிரிண்டில் தயாராகும் உலகின் முதல் கோவில் : விநாயகருக்கு கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்கு லிங்க வடிவிலும், பார்வதிக்கு தாமரை வடிவிலும் கருவறைகள் கட்டப்பட உள்ளதாக பிரபல கட்டுமான நிறுவனம் தகவல்
Jun 2 2023 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்ப பிரிண்டில் உருவாகும் உலகின் முதல் கோவில் தெலுங்கானா மாநிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. சித்திபேட்டை மாவட்டம் புருகுபள்ளியில் உள்ள சார்விதா மெடோஸ் என்ற கேட்டட் கம்யூனிட்டி வில்லா குடியிருப்பில் 3 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் 3டி அமைப்பில் கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னணி கட்டுமான நிறுவனமான அப்சுஜா இன்ப்ரா டெக் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக இந்த 3 டி பிரிண்ட் கோயிலுக்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. விநாயகருக்கு கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்கு லிங்க வடிவிலும், பார்வதிக்கு தாமரை வடிவிலும் கருவறைகள் கட்டப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.