மானாமதுரை அருகே உள்ள அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு அசைவ உணவு படையல் விழா : கறி, மீன் உணவுகளை அம்மனுக்கு படையலிட்டு பெண்கள் வழிபாடு
May 31 2023 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு, அசைவ உணவுகள் படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. கிராமத்து பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து, ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவந்தனர். பின்னர், அதனை அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு படையலிட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.