கரூரில் உள்ள மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : நடிகர்கள் ரஜினி, விஜய், விஜயகாந்த் ரசிகர்கள் பக்தர்களுக்கு அன்னதானம்
May 30 2023 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் உள்ள மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி, நடிகர்கள் ரஜினி, விஜய், விஜயகாந்த் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். வழி நெடுங்கிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கீதம் ரவி தலைமையிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையிலும், தேமுதிக சார்பாகவும் பல்வேறு இடங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடையே, திருவிழாவுக்காக நடப்பட்ட கம்பத்தை ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.