தருமபுரம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் - குண்டத்தில் ஒருவர் தவறி விழுந்ததால் பரபரப்பு
May 30 2023 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தீ மிதி உற்சவத்தில் தீ குண்டத்தில் குழந்தையுடன் ஒருவர் தவறி விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 45ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து, 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் எடுத்து வந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, முன்னதாக தீ குண்டத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு இறங்கியவர் தலைகுப்புற குண்டத்தில் விழுந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.