திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் பணி தொடக்கம்
Mar 28 2023 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் பணி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்க நகைகளை தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்க நகைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.