தர்மபுரி குமாரசுவாமி பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Jan 31 2023 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் மட்டுமே வடம்பிடித்து தேர் இழுக்கும் புகழ்பெற்ற தர்மபுரி குமாரசுவாமி பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியையொட்டி, சுவாமி நிலத்தில் புற்றுமண் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி வழிபட்டனர்.