பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஆட்டத்துடன் கிரிவலப்பாதையில் குவிந்தனர்
Jan 31 2023 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடி கிரிவல பாதையில் குவிந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் தைபூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. தேரோட்டம் 4-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் காவடி ஆட்டம் ஆடியும், பாடியும் உற்சாகமாக வலம் வந்தனர்.