தை கிருத்திகை மற்றும் தைப்பூசத் திருவிழாவின் 2ம் நாளை யொட்டி பழனியில் குவிந்த பக்தர்கள் - தந்த பல்லக்கில் காட்சியளித்த முத்துக்குமாரசாமியை தரிசித்த பக்தர்கள்
Jan 30 2023 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூச திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். மேலும் தை கிருத்திகை என்பதால் பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. அதிகாலையில் முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஒயிலாட்டம் மயிலாட்டம் என பக்தர்கள் ஆடிப்பாடி வந்து முருகனை தரிசித்தனர். இன்று இரவு வள்ளி, தேவசேனா சமேதரராக முத்துக்குமாரசாமி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.