ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜையையொட்டி பட்டணப் பிரவேச நிகழ்ச்சி
Jan 29 2023 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை ஆதீனத்தில், ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜையையொட்டி பட்டணப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாந்த திருவாடுதுறை ஆதீனத்தில், தை மாதத்தில் 10 நாட்கள் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளில் நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.