அரக்கோணம் அருகே காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
Jan 28 2023 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரக்கோணம் அருகே, அணைகட்டாப்புதூர் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள்~கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 3 நாட்களாக வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகங்கள் மற்றும் பூணாகுதி செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் கோபுர கலசத்தின் மீது கலசத்தில் இருந்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.