நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
Jan 28 2023 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தை திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்களும் நாக தோஷம் தீர்வதற்காக விரதம் இருந்து இங்கு நாகராஜரை தரிசித்து செல்வது வழக்கம். இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் தந்திரிகள் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திரு கொடியேற்றம் செய்து வைத்தனர். வருகிற 5 ஆம் தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ஆம் நாள் திருவிழாவான வரும் 6 ஆம் தேதி ஆராட்டு நிகழ்சியுடன் தைத்திருவிழா நிறைவடைய உள்ளது.