பழனி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jan 28 2023 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக கந்தசஷ்டி விழா நிறைவின் போது மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறும் இந்த முறை குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெறுவது சிறப்பம்சமாகும்.