திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் 2ம் நாளையொட்டி சிம்ம வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Jan 28 2023 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் 2ம் நாளையொட்டி சிம்ம வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில், கடந்த 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. இந்நிலையில், தைப்பூச விழாவின் 2ம் நாளின் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோயிலுக்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.