பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி - மூலவர் சிலையை தரிசிக்க தற்போது இயலாததால் பக்தர்கள் வருகை குறைவு
Jan 24 2023 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான 2-ம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. மூலவர் நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி நடைபெற்று வருவதால், கும்பாபிஷேகம் முடியும்வரை தரிசிக்க முடியாது. தொடர்ந்து, 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிசேகம் நடத்தப்பட்டு, மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும், நவபாசன முருகன் சிலையை தரிசிக்க இயலாததால் தற்போது பக்தர்கள் வருகையும் குறைந்து காணப்படுகிறது.