சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு : பக்‍தர்கள் முகக்‍கவசம் அணிய அறிவுறுத்தல்

Nov 26 2022 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 30-ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், பக்‍தர்கள் முகக்‍கவசம் அணிந்துவர திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்‍கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்‍கப்பட்டுள்ளதால், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்‍ கணக்கானோர் ஐயப்பனை தரிசிக்‍க சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00