விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் 108 வீணை இசை வழிபாடு : மாணவர்கள், பெற்றோர் மற்றும் இசை ஆர்வலர்கள் பங்கேற்பு
Oct 6 2022 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாடு வேண்டி, கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.