சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம் : உலக நன்மை, மழை வேண்டி பக்தர்கள் வழிபாடு
Aug 14 2022 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகே ஸ்ரீபாதம்தாங்கிகள் கைங்கர்ய சபை சார்பில், நாலாயிர திவ்யப்பிரபந்த பாராயணம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அருகே உள்ள ஸ்ரீயதுகிரி யதிராஜ ஜீயர் மடத்தில், நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம் இன்று நாள் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ தென்னாச்சார்ய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாதம்தாங்கிகள் கைங்கர்ய சபை சார்பில் இந்த நிகழ்வு இன்று காலை தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடைபெறும் இந்த பாராயண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.