புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றங்கரையில் 64 அடி உயர சிவபெருமான் சிலை அமைப்பதற்காக வெகு சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை
Jul 6 2022 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் 64 அடி உயர சிவபெருமான் சிலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தில், காசிக்கு இணையாக வீசம் பொருந்திய சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு அருகில் 64 அடி உயர சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு பூஜையில் வேளாண்துறை அமைச்சர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சிலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். 2023 மூன்றாம் ஆண்டு மகா புஷ்கரணி விழா இங்கு நடைபெற உள்ளது.