விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Jul 6 2022 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், கருவறை, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதி கோபுர கும்பாபிஷேகம் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. கிழக்கு பகுதி நுழைவு வாயில் ராஜகோபுரத்தில் நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 7 நிலைகளுடன் 108 அடி உயரத்துடனான ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்காம் கால யாக பூஜை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி பூர்ணாகதியுடன், மகா தீபாராதனைக்கு பிறகு, காலை 6 மணிக்கு பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டனர்.