திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : ராஜகோபுர உச்சியில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டு யாகசாலை பூஜை
Jul 5 2022 10:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், ராஜகோபுர உச்சியில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில், 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நாளை காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தின் உச்சியில், நான்கே முக்கால் அடி உயரம், 60 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட 7 செம்பு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.