ஆதினத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜை விழா : சிவாச்சாரியார்கள், பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பங்கேற்பு
Jul 4 2022 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே கூனம்பட்டி ஆதினத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள், பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
திருப்பூர் அருகே கூனம்பட்டியில் உள்ள கல்யாணபுரி ஆதீனத்தில் மாணிக்கவாசக ஸ்வாமிகள் குருபூஜை விழா 57வது மகா குரு சன்னிதானம் இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த குருபூஜை விழாவில் முனியப்ப சுவாமி பிரதிஷ்டை விழா, ஆதீன மட பல்லக்கு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், திருவாசகம் ஓதுதல், பாராயணம், நாமாவளி, பஜனை, கூட்டுப்பிரார்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன. இந்த விழாவில், மாணிக்கவாசகப் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட ஏராளமான மங்கலப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. எம்பெருமான் திருத்தேரிலும், ஆதினசுவாமிகள் பல்லக்கிலும் திருவீதி உலா நடைபெற்றது. இந்த குருபூஜை விழாவில் சிவாச்சாரியார்களும், பாடசாலை மாணவர்களும், சிவனடியார்கள்,பக்தர்கள் கலந்து கொண்டனர்.