திருப்பதி ஏழுமலையான் கோவில் : ஒரே நாளில் உண்டியல் காணிக்கை நாலரை கோடி ரூபாய் வசூல்
Jul 4 2022 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை நாலரை கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர். இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும், சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் மேற்கொண்டதாகவும், உண்டியல் காணிக்கையாக ஒரேநாளில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் வசூலானதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.