வார விடுமுறை என்பதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பொதுமக்கள் - தரிசனம் செய்தும், கடலில் நீராடியும் பக்தர்கள் வழிபாடு
Jul 3 2022 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், வார விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கோயிலில் முதியவர்கள் தரிசனம் செய்ய அமைக்கப்பட்ட தனிப்பாதை இன்னும் திறக்கப்படாமல் இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.