திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Jul 2 2022 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம், முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரும் 6-ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, காவிரியின் தென்கரையிலிருந்து ஆயிரக்கனக்காண பக்தர்கள் திருமஞ்சன தீா்த்தத்தை மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.