சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
May 20 2022 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை, நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை நங்கநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் கோயில்களில் மிகவும் புகழ் வாய்ந்த நங்கநல்லூர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 16ஆம் தேதி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுதர்சன யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. ஆஞ்சநேயருக்கு 32 அடி உயரம் கொண்ட மலர் மாலை, வெட்டிவேர் மாலை, துளசிமாலை ஆகியவை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா என்பதால், இதனை காண சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.