சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் பக்தர்கள், கனகசபை மீதேறி வழிபட அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
May 19 2022 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் பக்தர்கள், கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனசபை மண்டபத்தில் ஏறி நடராஜரை தரிசிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களிடமிருந்து பூஜைப் பொருட்கள், அமர்ந்து தரிசித்தல், அங்கப் பிரதட்சணம் உள்ளிட்டவைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தடைகள் நீக்கப்பட்டு, அனைத்துக் கோயில்களிலும் ஏற்கெனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையிலிருந்து கனகசபையிலிருந்து நடராஜரை தரிசிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.