காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசித் தேரோட்டம் : திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்
May 19 2022 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயலில் வைகாசித் திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருட சேவை உற்சவம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் திருத்தேர் திருவீதி உலா உற்சவம் இன்று நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரத்தைத் தொடர்ந்து, பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.