திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தொடங்கியது கோடை விழா - வெளிக்கோடை உற்சவத்தின் முதலாம் நாளில் கமலவல்லி நாச்சியாரை வழிபட்ட பக்தர்கள்
May 19 2022 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிகோடை, உள்கோடை என தலா 5நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், வெளிக்கோடை உற்சவத்தின் முதலாம் நாளான நேற்று தாயார் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் நாலுகால் மண்டபத்தை அடைந்து அங்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மல்லிகைப் பூக்களையும், பின்னர் பூப்போர்வையினை சாத்தப்பட்டு, வாசன திரவியங்களை சூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கமலவல்லி தாயாரை வழிபட்டனர். பின்னர், இரவு வீணைவாத்தியத்துடன் மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார்.