தாராபுரத்தில் காடு அனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்டம் : எச்சில் இலை மீது படுத்து உருண்டு வினோத நேர்த்திக்கடன்
May 16 2022 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காடு அனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்டத்தின் அன்னதானத்தில் சாப்பிட்ட இலையின் மீது படுத்து அங்கபிரதட்சனம் செய்யும் விநோத நேர்த்திக்கடன் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயிலில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தின்போது ஏராளமான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேண்டுதல்கள் நிறைவேற பூர்வாதி புண்ணியங்கள் கிடைக்க வேண்டி பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலை மீது படுத்து உருண்டு மடை புரலுதல் என்ற வினோத நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு எச்சில் இலை மீது படுத்து உருண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.