ரோம் நகரில் நாளை மறுநாள் நடைபெறும் புனித பட்டம் வழங்கும் விழா - முதன் முறையாக தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

May 13 2022 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரோம் நகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள விழாவில், முதன் முறையாக தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில், நட்டாலம் என்ற சிற்றூரில் பிறந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை, 40 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து, ஆரல்வாய்மொழி அருகே காற்றாடி மலை தட்டில், துப்பாக்கி குண்டுக்கு பலியானார். தன்னுடைய இறைப்பணி உயிர் தியாகத்தால், தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டுமென, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கோட்டார் மறை மாவட்டத்தின் பல பேராயர்கள் முயற்சியால், தேவசகாயம் பிள்ளைக்கு சமீபத்தில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது. ரோம் நகரில் நாளை மறுநாள் நடைபெறும் விழாவில், போப் பிரான்சிஸ், தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார். இதற்கான ஆயத்த பணிகளில், கோட்டார் மற்றும் குழித்துறை மறை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதும், தேசிய அளவிலான நன்றி கொண்டாட்டம், ஜூன் மாதம் 5ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலை தட்டு தேவாலயத்தில் நடைபெறுமென, கோட்டார் மறை மாவட்ட பேராயர் நசேரன் சூசை தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00