அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 1.5 லட்சம் பேர் முன்பதிவு
May 9 2022 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க, இதுவரை ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை, ஜூன் 30ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைகிறது. யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிய 26 நாட்களில் ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.