அரியலூரில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி : ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்பு
May 8 2022 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில் வீரமாமுனிவரால் எழுப்பப்பட்ட ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய தேர்பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் எழுப்பப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. மறைந்த மாண்புமிகு அம்மா அவர்களால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. அடைக்கல அன்னை திருத்தலத்தில் 291வது ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொருநாளும் ஆலயத்தில் சிறப்பு மற்றும் கூட்டு திருப்பலிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடைக்கல அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அடைக்கல அன்னை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து அன்னையை வரவேற்கும் வகையில் தேவ தூதர்கள் அன்னைக்கு மாலையிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசியாவிலேயே மிக உயரமான 53 அடி வெண்கலத்திலான அடைக்கல அன்னை சொரூபம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.