திருவள்ளூரில் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா : கருட சேவை - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
May 8 2022 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில், சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக பெருமாள், கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, கோயிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வீர ராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.