நெல்லையப்பர் திருக்கோயிலில் சித்திரை திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்
May 7 2022 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை தச்சநல்லூர் நெல்லையப்பர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் சித்திரை தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மற்றும் வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.