திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு அறுபத்து மூவர் நாயன்மார்கள் கிரிவலம்
May 7 2022 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு அறுபத்து மூவர் நாயன்மார்கள் கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 3ம் நாள் நிகழ்வையொட்டி, அறுபத்தி மூன்று நாயன்மார்கள் ஊர்வலம், மலைக்கோயில் கிரிவலப்பாதையில் நடைபெற்றது. இதில் உள்ளூரில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கிரிவலமாக வந்து தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.