திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா - கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
May 5 2022 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். சித்திரைத் திருவிழாவையொட்டி, தாயுமானவர் சுவாமி, மட்டுவார்குழலம்மை சமேதராகவும், உற்சவமூர்த்திகளுடனும் எழுந்தருளினார். தாயுமானவர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருவிழா தொடங்கியது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும் அம்பாளை வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.