ராஜஸ்தானில் கோயில் பூசாரியை அடித்துக் கொன்ற கொள்ளையர்கள் : தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
Dec 1 2021 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானில், கொள்ளையர்கள் தாக்கியதில் கோயில் பூசாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
ராஜஸ்தானின் ஜலோர் நகரில், 70 வயதுமிக்க பூசாரி ஒருவர், கோயிலுக்கு அருகில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார், தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.