திருச்செந்தூரில் 20 செ.மீ அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழை : முருகன் கோயிலில் புகுந்த மழை நீர் - பக்தர்கள் அவதி
Nov 25 2021 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்ததால், முருகன் கோயிலில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து, மழைநீரை அகற்றும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையிலும், பிற்பகலிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக 200 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது. முழங்காலளவு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து, கோயிலில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.