திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்றைக்கடந்து பூஞ்சோலையில் முத்தாலம்மன் பவனி
Oct 19 2021 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் கொலு மண்டபத்திலிருந்து ஊர்வலமாக பூஞ்சோலையை சென்றடைந்தார். தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் இன்று அகரம் முத்தாலம்மனுக்கு காலை ஆறு மணி அளவில் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கோவில் கொலு மண்டபத்தில் அமர்ந்திருந்த முத்தாலம்மன் சொருக்கு பட்டையத்தில் பவனி மேற்கொண்டார். வரும் வழியில் அம்மன் ஆற்றுக்குள் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சாலையோரம் கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.