அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாத திருவிழா : தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு
Oct 17 2021 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி மாத திருவிழா, கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது. அய்யா வைகுண்ட தர்மபதி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். 36 அடி உயரமுள்ள திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி, மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார். பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.