நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாள் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி
Oct 16 2021 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், பிரசித்திபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், இந்த ஆண்டிற்க்கான நவராத்திரி திருவிழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் 10-ம் நாளான நேற்று, அக்கோயிலில் பிரசித்திபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா காரணமாக, பிரம்மாண்டமாக நடைபெறும் யானைகள் அணிவகுப்புடனான சுவாமி ஊர்வலங்கள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில், அம்மன் ஊர்வலமாக வந்து, மகாதானபுரத்தில் பாணாசுரனை வேட்டையாடி வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த பரிவேட்டை திருவிழாவில், கொரோனா விதி முறைகள் பின்பற்றதால், குறைவான பக்தர்களே அனுமதிக்கபட்டனர்.