அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் புரட்டாசி மாத திருவிழா : 1000 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்குப் பூஜை
Oct 16 2021 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அடுத்த மணலி புதுநகரிலுள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் 1000 பெண்கள் பங்கேற்றனர்.
மணலி புது நகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் புரட்டாசி மாத திருவிழவையொட்டி, அய்யா வைகுந்தருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். பக்தர்கள் திரு ஏடு வாசிப்பு, உச்சி படிப்பு, உக படிப்பு வாசித்தனர். தங்கள் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை படையலிட்டு பக்தர்கள் வழிப்பட்டனர். இதையடுத்து 1000 திற்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலில் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பத்தாம் நாள் உற்சவமாக திருத்தேர் வீதி உலா நடைபெற உள்ளது.