புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - இன்று நள்ளிரவு மகிஷாசுர சம்ஹாரம் - பக்தர்கள் பங்கேற்க தடை
Oct 15 2021 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது. கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டிணத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது. வழக்கமாக கடற்கரையில் வைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள நடைபெறக்கூடிய மஹிஷாசுர சம்ஹாரம் கொரோனா தடுப்புநடவடிக்கை காரணமாக இன்று நள்ளிரவு 12-மணிக்கு கோவில் வளாகத்தில் வைத்து மிக எளிமையாக நடைபெறுகிறது.
இதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன அதனை எடுத்து இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது மகிஷாசுர சம்கார நிகழ்ச்சியையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.