குலசை தசரா திருவிழா கோலாகலம் : காளி, புலி, சிங்கம் உள்ளிட்ட வேடமணிந்து விரதமிருக்கும் பக்தர்கள்
Oct 14 2021 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவையொட்டி காளி, புலி, சிங்கம் உள்ளிட்ட வேடமணிந்து விரதமிருக்கும் பக்தர்கள், பல்வேறு இடங்களுக்குச் சென்று காணிக்கை திரட்டி வருகின்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டுக்கான தசரா விழா, கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக விரதமிருந்த பக்தர்கள், காளி, குரங்கு, புலி, சிங்கம் உள்ளிட்ட வேடமணிந்து ஆடிப்பாடி, அம்மனுக்கு காணிக்கை திரட்டி வருகின்றனர். குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுரசம்ஹாரம் நாளை நள்ளிரவு நடைபெற உள்ளது.