வடமாநிலங்களில் களைகட்டிய நவராத்திரி : துர்காஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை - துர்கை அம்மனுக்கு சிறப்பு ஆராதனை
Oct 14 2021 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி பண்டிகையையொட்டி, வடமாநில கோவில்களில் துர்காஷ்டமி சிறப்பு ஆரத்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டின.
துர்காஷ்டமியை ஒட்டி வடமாநில கோவில்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த பூஜை பந்தலில், பக்தர்கள் பிரார்த்தனை செய்து நவராத்திரியை கொண்டாடினர். குஜராத் மாநிலம் சூரத்தில், உமையாதாம் கோவிலில் மகா ஆரத்தி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கைகளில் தீபம் ஏந்தி துர்கையை பிரார்த்தனை செய்தனர்.
ஒடிஷாவின் புகழ்பெற்ற மணல்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில், காய்கறிகளைக் கொண்டு 5 அடி உயரத்திற்கு மணல் சிற்பம் உருவாக்கினார்.