திருப்பதி ஏழுமலையான் கோவில் 8-வது நாள் பிரம்மோற்சவ விழா -- உற்சவ மூர்த்திகளின் சர்வ பூபால வாகன சேவை
Oct 14 2021 10:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-வது நாளான இன்று காலை உற்சவ மூர்த்திகளின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பிரம்மோற்சவம், கோவில் வளாத்திலேயே நடைபெறும் நிலையில், விழாவின் 8-ம் நாளான இன்று காலை பூபால வாகன சேவை நடைபெற்றது. அப்போது சர்வ அலங்காரத்துடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பிரம்மோற்சவத்தின் நிறைவு வாகன சேவையாக உற்சவர் மலையப்ப சுவாமியின் குதிரை வாகன சேவை நடைபெற உள்ளது.